/* */

பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர் கைது

தாரமங்கலம் அருகே, பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர் கையும் களவுமாக பிடிபட்டார்.

HIGHLIGHTS

பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர் கைது
X

தாரமங்கலம் அருகே உள்ள பெரியகாடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி மணிமேகலை (வயது 47). இவர் தனது வீட்டில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று மாலை கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர், மணிமேகலையிடம் சிகரெட் வாங்குவது போல நடித்து, அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தாலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்றார். ஆனால் மணிமேகலை, அவரது மகன் இளவரசன் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று, அந்த நபரை மடக்கி பிடித்து, தாரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் கே.ஆர்.தோப்பூர் அருகே உள்ள மலையன்காடு பகுதியை சேர்ந்த ரகு கணேசன் (35) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 25 April 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு