Begin typing your search above and press return to search.
பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர் கைது
தாரமங்கலம் அருகே, பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர் கையும் களவுமாக பிடிபட்டார்.
HIGHLIGHTS
தாரமங்கலம் அருகே உள்ள பெரியகாடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி மணிமேகலை (வயது 47). இவர் தனது வீட்டில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று மாலை கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர், மணிமேகலையிடம் சிகரெட் வாங்குவது போல நடித்து, அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தாலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்றார். ஆனால் மணிமேகலை, அவரது மகன் இளவரசன் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று, அந்த நபரை மடக்கி பிடித்து, தாரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் கே.ஆர்.தோப்பூர் அருகே உள்ள மலையன்காடு பகுதியை சேர்ந்த ரகு கணேசன் (35) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.