/* */

சேலம் அருகே மேம்பாலத்திலிருந்து கார் கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிர்த் தப்பிப்பு

சேலம் அருகே மேம்பாலத்திலிருந்து தண்டவாளத்தின் மீது கார் கவிழ்ந்த விபத்தில் திருப்பூரைச் சேர்ந்த 6 பேர் உயிர்த்தப்பினர்.

HIGHLIGHTS

சேலம் அருகே மேம்பாலத்திலிருந்து கார் கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிர்த் தப்பிப்பு
X
விபத்துக்குள்ளான கார்.

திருப்பூர் மாவட்டத்திலிருந்து சேலம் வழியாக சென்ற கார், கருப்பூர் பகுதியில் நிலைதடுமாறி மேம்பாலத்தின் மீதிருந்து சேலம்- சென்னை தண்டவாளத்தின் மீது தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தினைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் உடனடியாக காரில் பயணித்த ஆறு பேரை மீட்கும் பணியிலும் ஈடுபட்டு காயமடைந்தவர்களை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடனடியாக தண்டவாளத்தின் மீது விழுந்து கிடந்த காரை அப்புறப்படுத்தினர். கருப்பூர் காவல்நிலையத்தினர் மேற்கொண்ட விசாரணையில் கோத்தகிரியை சேர்ந்த காரின் உரிமையாளர் ரமேஷ்குமார் காரை ஓட்டி வந்ததும், காரில் அவருடன் திருப்பூரில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் விஜய்,கார்த்திகேயன், யுவராஜ், மூவேந்தன், பிரதாப் ஆகியோர் காரில் பயணித்தத்தும் தெரியவந்தது.

ஜோலார்பேட்டையில் காது குத்து நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து காரணமாக சென்னை மற்றும் சேலம் மார்க்கத்தில் ரயில் வண்டிகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன.

Updated On: 6 Feb 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்