/* */

சேலம் மாவட்டத்தில் தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் இன்று நிறுத்தம்

சேலம் மாவட்டத்தில் தட்டுப்பாடு காரணமாக அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் இன்று நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் தட்டுப்பாடு காரணமாக  தடுப்பூசி போடும் பணிகள் இன்று நிறுத்தம்
X

சேலம் மாவட்டத்தில் தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் இன்று நிறுத்தம் 

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை முழுவதுமாக கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் 135 மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு கோவாக்சின், கோவிசீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி கையிருப்பு ஏதும் இல்லாததால் இன்றைய தினம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் தடுப்பூசி போட ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சேலம் மாவட்டத்திற்கு இதுவரை வந்த 7 லட்சத்து 38 ஆயிரத்து 340 தடுப்பூசிகள் அனைத்தும் காலியாகிவிட்டதால் சென்னையில் இருந்து தடுப்பூசி வந்தால் மட்டுமே மீண்டும் தடுப்பூசி போடும் பணிகள் துவங்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 30 Jun 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  3. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  4. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  5. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  6. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  7. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  8. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ரூ.7.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க...
  10. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி