/* */

மேட்டூரில் சிறுமியை கடத்திய மினி பேருந்து ஓட்டுநர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது

மேட்டூரில் சிறுமியை கடத்திய மினி பேருந்து ஓட்டுநர்  போக்சோ சட்டத்தின்கீழ் கைது
X

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 12-ஆம் தேதி அன்று வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை . இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் 13-ம் தேதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து சிறுமியை போலீசார் தேடி வந்தனர் . விசாரணையில் கருப்பூர், மூங்கில் பட்டியை சேர்ந்த மினி பேருந்து ஒட்டுனர் மாரியப்பன் என்பவருடன் சிறுமி காதலித்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மாரியப்பனின் செல்போன் நம்பரை ஆய்வு செய்ததில் இருவரும் திருநெல்வேலியில் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் உறவினர் வீட்டில் தங்கியிருந்த மாரியப்பன் மற்றும் சிறுமியை மீட்டனர் . இருவரையும் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியை கடத்திச் சென்ற குற்றத்திற்காக மினி பேருந்து ஓட்டுநர் மாரியப்பன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

Updated On: 24 Jun 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்