மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19, 665 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19, 665 கன அடியாக அதிகரிப்பு
X

பைல் படம்

கர்நாடகாவில் பெய்துவரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் பெய்துவரும் மழை காரணமாக காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 19, 665 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 72.55 அடியிலிருந்து 73.27 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 35.57 டி.எம்.சி.யாக உள்ளது.

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 6,841 கன அடியிலிருந்து 19,665 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், அணையிலிருந்து டெல்டா பாசனத் தேவைக்காக வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பிரசாரம் முடிவுக்கு, நாளை பரபரப்பான வாக்குப்பதிவு..!