/* */

சேலம் அருகே பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 7 பேர் கைது

மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரத்தில் அருகே பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 7 பேரைபோலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சேலம் அருகே பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 7 பேர் கைது
X

மேட்டூர் ஜலகண்டாபுரத்தில், மதுபாட்டில் கடத்தல் குறித்து விசாரணை நடத்திய போலீசார். 

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பக்கத்து மாவட்டமான தர்மபுரியில் இருந்து சிலர் மது பாட்டில்களை வாங்கி வந்து மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, இன்று மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரத்தில் போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனங்களில் மதுபாட்டில்களை கடத்தி வந்த வேல்முருகன், சதீஸ், செல்வராஜ், பிரகாஷ்,வேலு, செல்வம்,ரவிசங்கர் ஆகிய 7 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து, 131 மதுபாட்டில்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம், இரு சக்கர வாகனத்தில் தருமபுரி மாவட்டத்திற்கு மது வாங்க சென்ற ஜலகண்டாபுரத்தை சேர்ந்த 3 பேர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Updated On: 22 Jun 2021 1:53 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?