Begin typing your search above and press return to search.
மேட்டூர் அணையில் டெல்டா பாசன நீர் திறப்பு 5,000 கன அடியாக குறைப்பு
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீர் 14 ஆயிரத்திலிருந்து 5,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
மேட்டூர் அணையின் இன்று மதியம் 2 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 68.55 அடியாகவும், நீர்இருப்பு 31.47 டி.எம்.சியாகவும் உள்ளது.
அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 12,871 கன அடியிலிருந்து 13,670 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி டெல்டா பாசன வசதிக்காக திறக்கப்படும் நீரின் அளவு இன்று மதியம் 2:00 மணி முதல் 14 ஆயிரம் கன அடியில் இருந்து 5,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.