/* */

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.

HIGHLIGHTS

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
X

சேலம் நீதிமன்ற வளாகம்.

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மல்லியகுந்தம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அங்கமுத்து (21). இந்த வாலிபர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனையடுத்து வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் இறுதி கட்ட விசாரனை முடிந்த நிலையில் இன்று போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி முருகானந்தம் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அங்கமுத்துவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 20000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Updated On: 6 Aug 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு