Begin typing your search above and press return to search.
215 வது வேட்புமனுவை தாக்கல் செய்த தேர்தல் மன்னன்
மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் கின்னஸ் சாதனைக்காக 215 வது முறையாக வேட்பு மனுவை தேர்தல் மன்னன் பத்மராஜன் தாக்கல் செய்தார் .
கடந்த 1988 ஆம் ஆண்டு முதன்முதலாக சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய பத்மராஜன் (61) தொடங்கினார்.அதன் பிறகு வார்டு கவுன்சிலர் தொடங்கி ஜனாதிபதி வரை 214 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளார். மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே 5 முறை வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியிட்ட நிலையில் 6 வது முறையாக இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.மேலும் எடப்பாடி சட்டமன்ற தொகுதியிலும் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.இவர் போட்டியிட்ட இடங்களில் கடந்த 2011 -ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிகபட்சமாக 6,273 வாக்குகள் பெற்றுள்ளார் .