/* */

வாரச்சந்தைக்கு தடை: மாற்று இடத்தில் விற்பனைக்காக ஒன்று கூடிய விவசாயிகள்

கொங்கணாபுரம் சனிக்கிழமை வாரச்சந்தைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததால் மாற்று இடத்தில் ஆடுகள் விற்பனைக்காக ஒன்று கூடிய விவசாயிகள்.

HIGHLIGHTS

வாரச்சந்தைக்கு தடை: மாற்று இடத்தில் விற்பனைக்காக ஒன்று கூடிய விவசாயிகள்
X

ஆடு விற்பனைக்காக மாற்று இடத்தில் கூடிய விவசாயிகள்.

கொரோனா தொற்று காரணமாக சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் வாரசந்தைக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தடை விதித்திருந்தார். இந்நிலையில், தொடர்ந்து நான்கு வாரமாக கொங்கணாபுரம் சனிக்கிழமைகளில் சந்தை கூடாததால் இதனை நம்பியிருந்த எடப்பாடி தாலுக்காவிற்குட்பட்ட விவசாயிகள் 100க்கணக்கானோர் தாங்கள் வளர்த்த வந்த ஆடு, கோழிகளை விற்க முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை வாரச்சந்தைகூடாததால், அனைத்து விவசாயிகளும் ஒன்று கூடி முடிவெடுத்து கொங்கணாபுரம் அடுத்த சாணாரப்பட்டி காட்டுப்பகுதியில் தற்காலிக ஆட்டு சந்தையை கூட்டி தாங்கள் வளர்த்த ஆடு கோழிகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் கூட்டிய தற்காலிக ஆட்டு சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, கோழிகளை விற்பனை செய்தும், வாங்கியும் சென்றனர்.


Updated On: 21 Aug 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  2. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  3. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  4. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  6. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  7. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...