/* */

கல்லபாளையம் ஞானகந்தசாமி கோவிலில் புரட்டாசி பவுர்ணமி தேரோட்டம்

எடப்பாடி அடுத்த கல்லபாளையம் ஞானகந்தசாமி கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமி தேரோட்டம் நடைப்பெற்றது.

HIGHLIGHTS

கல்லபாளையம் ஞானகந்தசாமி கோவிலில் புரட்டாசி பவுர்ணமி தேரோட்டம்
X

கல்லபாளையம் ஞானகந்தசாமி கோவிலில் பெருமாள் சுவாமிக்கு புரட்டாசி மாத பெளர்ணமி தேரோட்டம் நடைப்பெற்றது.

சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் வெள்ளரி வெள்ளி கிராமம் கல்லபாளையம், நாச்சிருத்தான்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீ ஞானகந்தசாமி திருக்கோவிலில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய முக்கிய விசேஷ நாட்களை தொடர்ந்து ஒவ்வெறு மாதமும் சஷ்டி, கிருத்திகை பவுர்ணமி ஆகிய நாட்களில் ஸ்ரீ ஞான கந்தசாமிக்கு சிறப்பு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

அதனை தொடர்ந்து இந்த வருடம் பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் திங்கட்கிழமை பெருமாள் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தேரில் வைத்து பூஜை நடைபெற்றது. பின்னர் பவுர்ணமி தேரோட்டம் நடைபெற்றது.

இதில் பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷங்கள் எழுப்பி தேரை இழுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 20 Sep 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  2. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  3. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  4. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  5. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  6. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  7. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  8. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  9. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  10. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?