/* */

கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.25 கோடிக்கு பருத்தி ஏலம்

கொங்கணாபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ 2.25 கோடிக்கு பருத்தி ஏலம் விற்பனையானது.

HIGHLIGHTS

கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.25 கோடிக்கு பருத்தி ஏலம்
X

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கிளை செயல்பட்டு வருகிறது. இன்று நடைப்பெற்ற பருத்தி மற்றும் எள் டெண்டரில் கொங்கணாபுரம் மற்றும் எடப்பாடி சுற்றுவட்டார விவசாயிகளால் 50 மூட்டை எள் கொண்டு வரப்பட்டு, வெள்ளை எள் ரூ. 83.50முதல் ரூ. 84.90 வரையிலும், சிகப்பு எள் ரூ. 75.20 முதல், ரூ.97.10 வரையிலும் விற்று தீர்ந்து ரூ.3 லட்சத்திற்கு விற்பனை நடைப்பெற்றது.

பருத்தி டெண்டரில் சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, மாவட்ட விவசாயிகள் மற்றும் சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். சுமார் 7500 பருத்தி மூட்டைகள் விவசாயிகளால் கொண்டவரப்பட்டு மொத்தம் 1200 லாட்டுகளாக வைத்து ஏலம் விடப்பட்டது.

சுரபிரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.8750 முதல் அதிகப்பட்சமாக ரூ. 9699 வரையிலும், பி.டி. ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 6898 முதல் அதிக பட்சமாக ரூ.7899, வரையிலும் டி.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ. 9550, அதிகப்பட்சமாக ரூ. 10399 விலை தீர்ந்து மொத்தம் ரூ. 2.25 கோடிக்கு விற்பனை நடைப்பெற்றது. அடுத்த டெண்டர் 31.07.21 சனிக்கிழமை அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 24 July 2021 12:45 PM GMT

Related News