எடப்பாடியில் நெடுஞ்சாலைகளின் ஓரம் தூர்வாரும் பணிகள் தீவிரம்

சங்ககிரி - மேச்சேரி மாநில நெடுஞ்சாலைகளில் இருபுறமும் கழிவு நீர் கால்வாய்கள் மற்றும் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வட கிழக்கு பருவமழை தொடங்கயிருப்பதை முன்னிட்டு, எடப்பாடி நெடுஞ்சாலை கோட்டம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக சங்ககிரி - மேச்சேரி மாநில நெடுஞ்சாலைகளில் இருபுறமும் கழிவு நீர் கால்வாய்கள் மற்றும் மழை நீர் வடிகால் அமைப்புகள் தூர்வாரப்பட்டு சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
வரும் 25 ந்தேதி வரை 5 கட்டமாக நடைபெறும் இப்பணியினை உதவிப் பொறியளர் அருள் செல்வம் எடப்பாடி கோட்ட பொறியாளர் சண்முக சுந்தரம் துவக்கி வைத்தனர்.
இந்த பணிகளில் 25க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu