Begin typing your search above and press return to search.
எடப்பாடி நகராட்சியின் சார்பாக கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி சார்பில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் இன்று நடைபெற்றது.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி தொடக்கப்பள்ளியில் இன்று நகராட்சியின் சார்பில், ஆணையாளர் சரவணன் தலைமையில் நடைப்பெற்றது. இதில் சாலையோரம் கடை போட்டுள்ள சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என 500 பேருக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.