/* */

சேலம் அருகே சிறுவனை விஷ ஊசி போட்டு கொன்றதாக புகார்

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை விஷ ஊசி போட்டு கொன்றதாக பரபரப்பு.

HIGHLIGHTS

சேலம் அருகே சிறுவனை விஷ ஊசி போட்டு கொன்றதாக புகார்
X

விச ஊசி போட்டு கொல்லப்பட்டதாக கூறப்படும் சிறுவன் வண்ண தமிழ். 

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே கொடைக்காரன் வளவு பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் வண்ண தமிழ் (15). இவருக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் காலில் ஏற்பட்ட காயத்தால் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நாளடைவில் அவரை பரிசோதித்த மருத்துவர் புற்றுநோய் உள்ளதாக கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கோவை மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஒன்றரை வருடமாக சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு சிறுவனின் தந்தை எடப்பாடியில் உள்ள மருத்துவரை அழைத்து சிறுவனுக்கு விஷ ஊசி போட்டுக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கொங்கணாபுரம் காவல் துறையினருக்கு வந்த புகாரின் அடிப்படையில், கொங்கணாபுரம் காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 4 Oct 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்