/* */

விருத்தாசலம்- சேலம் செல்லும் அதிவிரைவு ரயில் இன்று முதல் இயக்கம்

விருத்தாசலம்- சேலம் செல்லும் அதிவிரைவு ரயில் இன்று முதல் இயக்கப்பட்டன. பயணிகளின்றி ரயில் வெறிச்சோடி காணப்பட்டது.

HIGHLIGHTS

விருத்தாசலம்- சேலம் செல்லும் அதிவிரைவு ரயில் இன்று முதல் இயக்கம்
X

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து வரும் ஜூன் 7ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு நீட்டித்துள்ளது. பஸ், ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் சிறு வியாபாரம் மற்றும் வேலைக்கு செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் கொரோனா பரவலுக்கு முன்பு இயக்கப்பட்டு வந்த விருத்தாசலம்- சேலம் அதிவிரைவு ரயில் இன்று முதல் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ,ஆத்தூர், வாழப்பாடி வழியாக தினசரி இயக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

இந்த அதிவிரைவு ரயில் தினசரி காலை 6 மணிக்கு புறப்பட்டு 7.30 மணிக்கு ஆத்தூர் வழியாக 9.30 மணிக்கு சேலம் சென்றடையும் என்றும் அதேபோல் மாலை 6 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு விருத்தாசலம் சென்றடையும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று இயக்கப்பட்ட விருத்தாசலம் – சேலம் செல்லும் அதிவிரைவு ரயில் ஆத்தூர் ரயில் நிலையத்திற்கு 7.30 மணிக்கு வந்தது. ஆனால் ரயில் இயக்குவது குறித்து முன் அறிவிப்பு ஏதும் இல்லாததால் பயணிகளின்றி ரயில் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் ரயிலில் அரசு பணியாளர்களை தவிர யாரும் செல்லாததால் பயணிகள் ரயில் ஆட்கள் இன்றி காலியாக சென்றது.

Updated On: 1 Jun 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  6. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  7. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  8. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  9. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  10. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்