/* */

காதலிக்க மறுத்த மாணவி: புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது

காதலிக்க மறுத்த மாணவியின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு மிரட்டிய வாலிபர் கைது.

HIGHLIGHTS

காதலிக்க  மறுத்த  மாணவி: புகைப்படத்தை  இணையதளத்தில் வெளியிட்ட வாலிபர்  கைது
X

கைது செய்யப்பட யுவராஜ்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியுடன், தென்னங்குடிபாளையம் கிராமத்தை சேர்ந்த யுவராஜ் ( 19 ) என்கிற வாலிபர் மாணவியுடன் நட்பாக பழகி அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார். இதன் பின்னர் காதலிக்க வில்லையெனில் சமூக வலைதளங்களில் புகைப்படத்தை வெளியிடுவதாக மாணவியை யுவராஜ் மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஆத்தூர் ஊரக காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். அப்போது யுவராஜ் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என்று கூறியதால் போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் யுவராஜ் தனது முகநூல் பக்கத்தில் மாணவியின் புகைப்படத்தை பதிவிட்டு தன் மனைவி என பதிவு செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் யுவராஜீடம் கேட்டபோது அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவியின் பெற்றோர் மீண்டும் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் யுவராஜ் கைது செய்து, அவர் மீது மீது கொலை மிரட்டல் உள்பட இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.

Updated On: 20 Aug 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’