/* */

ஆத்தூர் அருகே குளத்தில் தவறி விழுந்த லாரி டிரைவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஆத்தூர் அருகே குளத்தில் தவறி விழுந்த லாரி டிரைவர் நீரில் மூழ்கி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

ஆத்தூர் அருகே குளத்தில் தவறி விழுந்த லாரி டிரைவர்  நீரில் மூழ்கி உயிரிழப்பு
X

பைல் படம்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கல்லாநத்தம் வடக்குத் தெருவைச் சேர்ந்த பெரியசாமி இவரது மகன் தங்கராஜ் (57) இவருக்கு மயில் என்ற மனைவியும் அழகேசன், கணேசன் என்ற மகனும், சுமதி என்ற மகளும் உள்ளனர்.

இவர்களுக்கு திருமணமாகி தனிக்குடித்தனம் இருந்துவரும் நிலையில், தங்கராஜ் லாரி டிரைவராக வெளியூரில் தங்கி லாரி ஓட்டிவந்துள்ளார் .

இவருக்கு கடந்த ஆறு மாத காலமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், வேலைக்கு செல்லமுடியாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இவர் நேற்று இரவு கல்லாநத்தம் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள ஊர் குளத்தில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவர் நீரில் மூழ்கி இறந்த நிலையில் சடலமாக மிதப்பதை கண்டு அப்பகுதி மக்கள் இன்று ஆத்தூர் ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் தங்கராஜின் உடலை கைப்பற்றி ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 13 Feb 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்