சேலம் மாவட்டத்தில் மேலும் புதிதாக 456 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பாதிப்புகளும், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 428 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 456 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் 282 பேர், ஆத்தூரில் 30 பேர், ஓமலூரில் 18 பேர், சங்ககிரியில் 17 பேர், சேலம் ஒன்றியம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா 14 பேர், எடப்பாடி, பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 11 பேர், மேட்டூரில் 9 பேர், காடையாம்பட்டியில் 7 பேர், மேச்சேரி, நங்கவள்ளி, வாழப்பாடி, தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் தலா 6 பேர், அயோத்தியாப்பட்டணம், தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா 5 பேர், கெங்கவல்லியில் 4 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 2 பேர், கொளத்தூர், கொங்கணாபுரம், நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 873 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 362 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 3 ஆயிரத்து 536 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 85-க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு நோய் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu