சோளிங்கரில் நேரடி கொள்முதல் நிலையம் திறப்பு
பரவத்தூரில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பரவத்தூர் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு உறுப்பினர் வெங்குப்பட்டு ராமன் தலைமை தாங்கினார்.
பரவத்தூர் ஊரட்சி மன்ற தலைவர் தனம்மாள் மணிகண்டன், வெங்குப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் அசோகன் கலந்துகொண்டு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நெல் மூட்டைகளை தாமதப்படுத்தாமல் உடனடியாக நெல் கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நாகராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பூங்கொடி ஆனந்தன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, சாவித்திரி பெருமாள், பிச்சாண்டி, நதியா மதன்குமார், ஊராட்சி செயலாளர்கள் ரவிச்சந்திரன், முருகன் ஆகியோர் உடனிருந்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu