ஆற்காட்டில் கஞ்சா வைத்திருந்தவர் கைது

ஆற்காட்டில் கஞ்சா வைத்திருந்தவர் கைது
X
ஆற்காட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த வாலிபரை ஆற்காடு போலீஸார் கைது செய்தனர்

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு இராதாகிருஷ்ணன் தெருவைச்சேர்ந்த ராஜேஷ்(25), இவர் வீட்டிலேயே கஞ்சாவைப் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக ஆற்காடு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .

அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீஸார், ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ள ராஜேஷ், வீட்டிற்குச் சென்று அவரது வீட்டை சோதனையிட்டனர்.

சோதனையின் போது மறைத்து வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து ராஜேஷைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி