/* */

தொண்டியில் கொரோனா விதி மீறிய வங்கிக்கு 5ஆயிரம் அபராதம்

தொண்டியில் கொரோனா விதிகளை மீறிய வங்கிக்கு கோட்டாட்சியர் சேக் மன்சூர் ரூ 5 ஆயிரம் அபராதம் விதித்தார்.

HIGHLIGHTS

தொண்டியில் கொரோனா விதி மீறிய வங்கிக்கு  5ஆயிரம் அபராதம்
X

தொண்டியில் வங்கியில் கொரோனா விதி மீறல் குறித்து ஆய்வு நடத்திய கோட்டாட்சியர் சேக் மன்சூர்.

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.

பின்னர் கடைவீதியில் உள்ள கடைகள், காய்கறி மார்க்கெட், புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றில் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கோட்டாட்சியர் வழங்கி தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது முகக்கவசம் அணியாத சுமார் 5க்கு மேற்பட்ட கடைகளுக்கும், 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்ந்து கனரா வங்கிக்கு சென்ற கோட்டாட்சியர் அங்கு அரசு அறிவித்த கொரோனா தடுப்பு நடிவடிக்கைகளை பின்பற்றாததால் வங்கிக்கு ரூபாய் 5000 அபராதம் விதித்து எச்சரித்தார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் பேரூராட்சி பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Aug 2021 5:29 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...