/* */

நாக்கை அறுத்த பெண்ணிற்கு ஆறுதல் கூறிய திமுக எம்எல்ஏ

மு.க ஸ்டாலின் வெற்றி பெற நாக்கை அறுத்த பெண்ணிற்கு திமுக எம்எல்ஏ ஆறுதல் கூறினார்.

HIGHLIGHTS

நாக்கை அறுத்த பெண்ணிற்கு ஆறுதல் கூறிய திமுக எம்எல்ஏ
X

நாக்கை அறுத்துக்கொண்டு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணை பரமக்குடி திமுக எம்எல்ஏ முருகேசன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொதுவக்குடியைச் சேர்ந்த கார்த்திக் மனைவி வனிதா. இவர் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் முதல்வர் ஆனால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக வேண்டியுள்ளார். பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசலில் முன்பு தனது நாக்கினை பிளேடால் அறுத்து உண்டியலில் போட முயற்சி செய்துள்ளார்.

ஆனால் கோவில் திறக்காததால் நாக்கினை வாசல்படியில் வைத்துவிட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். தற்போது அவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை திமுக நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் பரமக்குடி திமுக எம்எல்ஏ முருகேசன் வனிதாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்கினார். வனிதாவின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Updated On: 11 May 2021 5:50 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...