Begin typing your search above and press return to search.
புதுக்கோட்டையில் தொற்றால் இறந்தவர் உடல் : நல்லடக்கம் செய்த தவ்ஹீத் ஜமா அத்
புதுக்கோட்டையில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை, தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினர் நல்லடக்கம் செய்தனர்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் உப்புதெருவை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய உதவுமாறு அவரது உறவினர்கள் அன்னவாசல் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கு கோரிக்கை விடுத்தனர்.
அவர்களது கோரிக்கையை ஏற்று அன்னவாசல் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இறந்தவரின் உடலை அடக்கம் செய்தனர்