நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை வழங்கக் கோரிமாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்
நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
தேசிய வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நூறுநாட்கள் வேலை வழங்க வலிறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் புதன்கிழமை கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் ஒன்றியத் தலைவர் எம்.சி.லோகநாதன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் எஸ்.லெட்சுமணன், பொருளாளர் ஏ.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.சண்முகம் சிறப்புரையாற்றினார். போராட்டத்தை ஆதரித்து தோழமைச் சங்க நிர்வாகிகள் ஆர்.சி.ரெங்கசாமி, எம்.ஆர்.சுப்பையா, மா.ஜோஷி ஏ.தேவராஜன் உள்ளிட்டோர் பேசினர்.
தேசிய வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நூறுநாட்கள் வேலை வழங்க வேண்டும். 40 விழுக்காடு பாதிக்கப்பட்டவர்ளுக்கு ரூ.3000, கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5000 உதவித்தொகை வழங்க வேண்டும். தகுதி உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு பணித்தலப் பொறுப்பாளராக பணி வழங்க வேண்டும். விண்ணப்பித்த அனைவருக்கும் உதவித்தொகையும், வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீடும், வீட்டுமனைப்பட்டாவும் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu