/* */

திருமயம் அருகே உலக மண் வள தின விழா

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, அரிமளம் வட்டாரத்தில் உலக மண் தின விழா நடைபெற்றது

HIGHLIGHTS

திருமயம் அருகே உலக மண் வள தின விழா
X

அரிமளம் வட்டார வேளாண்மை துறையின் சார்பில் வலையம்பட்டி யில் உலக மண் வள தின விழா நடந்தது

அரிமளம் வட்டார வேளாண்மை துறையின் சார்பில் வலையம்பட்டி யில் உலக மண் வள தின விழா நடந்தது.

விழாவிற்கு அரிமளம் வேளாண்மை உதவி இயக்குநர் பாண்டி தலைமை வகித்தார். புதுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர்(நுண்ணீர் பாசனத் திட்டம்) முகமது ரபி பேசியதாவது:

மண் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை ஆதாரம் ஆகும். மண் பாக்டீரியா,,பூஞ்சை, பாசிகள், மண்புழு, எறும்பு போன்ற உயிர்களுக்கு வாழ்விடமாக உள்ளது.தமிழ்நாட்டில் வண்டல் மண், கரிசல் மண், செம்மண், செம்புறைமண், பாலை மண், உவர் மண், போன்றவை காணப்படுகிறது. வெப்பம், நீர், காற்று ஆகியவற்றால் பாறைகள் சிதைவடைந்து மண் உருவாகிறது. செயற்கை உரங்களை அதிகமாக இடுவதால் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் அழிவது மட்டுமின்றி மண்வளமும் கெடுகிறது.

எனவே விவசாயிகள் இயற்கை உரங்களை பயன்படுத்தி மண் வளத்தை பாதுகாக்க வேண்டும். குறிப்பாக விவசாயிகள் மண் பரிசோதனை செய்து மண்வள அட்டை பெற்று அதன் முடிவின்படி பயிர் சாகுபடி செய்தால் லாபம் கிடைக்கும். வேம்பு இலை,நொச்சி இலை, எருக்கு, புங்கன் போன்ற பசுந்தழைகளை வயலில் இடுவதால் மண் வளம் கூடுகிறது. பசுந்தாள் உரப்பயிர்களான சணப்பு, தக்கைப் பூண்டு,கொழுஞ்சி ஆகிய பயிர்களை வயலில் வளர்த்து மடக்கி உழுவதன் மூலம் மண் வளம் மேம்படுகிறது.

அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா,பொட்டாஷ் பாக்டீரியா,துத்தநாக பாக்டீரியா போன்ற நுண்ணுயிர் உயிர் உரங்களை பயன்படுத்துவதால் அவை மண்ணில் பல்கி பெருகி பயிருக்குத்தேவையான தழை , மணி,,சாம்பல் சத்துக்களை தரும் . நுண்ணூட்ட சத்துக்களை மண்ணில் நிலை நிறுத்தி மண் வளத்தை கூட்டுகிறது. உழவன் செயலியை கைபேசியில் பதிவேற்றம் செய்து தங்களுக்கு தேவையான இடுபொருட்களை விவசாயிகள் முன் பதிவு செய்ய வேண்டும் என்றார் அவர்.

வேளாண்மை அலுவலர் ரெங்கசாமி பேசுகையில், தமிழ் மண்வள இணையதளத்தின் மூலமாக மண் வள அட்டைகளை பதிவிறக்கம் செய்து தங்களது நிலத்தில் பயிர் சாகுபடிக்கான உரப்பரிந்துரைகளை பயன்படுத்தலாம் என்றார். உதவி வேளாண்மை அலுவலர் டயானா ஜெனிபர் வரவேற்றார் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளர் ராஜகோபால் கடையக்குடி, வலையம்பட்டி விவசாயிகள் கலந்து கொண்டனர். அட்மா திட்ட உதவி தொழில் நுட்ப மேலாளர் பாண்டியன் நன்றி கூறினார்.

Updated On: 6 Dec 2023 11:30 AM GMT

Related News