/* */

திருமயம் ஒன்றிய ஊராட்சி பணியாளர்கள் சார்பில் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு

தென் மாவட்டங்களில் மழையினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் புதன் கிழமை அனுப்பி வைக்கப்பட்டது

HIGHLIGHTS

திருமயம் ஒன்றிய ஊராட்சி பணியாளர்கள் சார்பில் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு
X

திருமயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி பணியாளர்கள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

திருமயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி பணியாளர்கள் சார்பில் தென் மாவட்டங்களில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் புதன்கிழமை அனுப்பப்பட்டது.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல்லாயிரக் கணக்கான மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து அன்றாட உணவுக்கு சிரமப்பட்டு வருகின்றனர். மழையினால் உடைமைகளை இழந்த மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவுப்படி பல்வேறு துறை அமைச்சர் களும் களத்தில் நின்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

அதேசமயம் தமிழ்நாடு அரசுடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இதனிடையே புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியத்திற்கு உள்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர் கள் மற்றும் ஊராட்சி, ஒன்றிய பணியாளர்கள் தென் மாவட்டங்களில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முன் வந்தனர்.

இதனை அடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், நளினி ஆகியோர் தலைமையில் நன்கொடை பெறப்பட்டு இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளான உணவு, குடிநீர் உள்ளிட்ட பொருட்கள் வாங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்ப மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவி செய்ய முன்வந்த திருமயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி பணியாளர்களின் மனித நேயம் அனைவரும் பாராட்டியுள்ளனர்..



Updated On: 20 Dec 2023 3:15 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  8. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  10. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...