/* */

சாலை வசதி இல்லாததால் பெண் கொடுக்க மறுப்பு : பொது மக்கள் புலம்பல்

புதுக்கோட்டையில் 12 ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாததால் பிற கிராம மக்கள் பெண் கொடுக்க மறுப்பு தெரிவிப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் புலம்பி வருகின்றனர்.

HIGHLIGHTS

12 ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாததால் பிற கிராம மக்கள் பெண் கொடுக்க மறுப்பு தெரிவிப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் புலம்பி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பேரூராட்சியில் அரிமளத்திலிருந்து மணப்பட்டி செல்லும் சுமார் நான்கு கிலோ மீட்டர் சாலை கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக சீர் அமைக்கப்படாமல் கிடக்கிறது. அந்த சாலை பள்ளமும் மேடுமாக பல்லாங்குழி போல காட்சியளிக்கிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள சுள்ளாம்பட்டி, தேமக்கம்பட்டி, மணப்பட்டி, சாமந்தன்பட்டி, கோவில்வாசல், இசுகுப்பட்டி உள்ளிட்ட ஆறு கிராம மக்கள் இந்த சாலையைத் தான் பயன்படுத்த வேண்டும். மக்களின் அன்றாட தேவைகளுக்கு அரிமளம் பகுதிக்கு சென்று வர இந்த சாலைதான் முக்கிய தடம்.

குண்டும் குழியுமாக இருப்பதால் பள்ளி செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் கர்ப்பிணி தாய்மார்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

மேலும் பல ஆண்டுகளாக சாலை சேதமடைந்துள்ளதால் தங்கள் பகுதியில் பெண் எடுக்கவோ, பெண் கொடுக்க கூட யாரும் முன்வருவதில்லை என்று அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறையினருக்கு மனு கொடுத்தும், இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் அப்பகுதியைச் சேர்ந்த 6 கிராம மக்கள் அரிமளத்திலிருந்து தேனிப்பட்டி செல்லும் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தங்கள் பகுதியில் சேதமடைந்துள்ள சாலையை பிரதம மந்திரி கிராமச்சாலைகள் திட்டத்தின் கீழ் சீரமைக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்டவர்கள் கடிதம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தங்களது போராட்டம் தொடரும் என்று கூறி, சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் இரண்டரை மணி நேரம் தொடர்ந்து நடந்த இந்த போராட்டம், பேரூராட்சி அதிகாரிகள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் பேச்சுவார்தை நடத்தினர். 'தற்போது தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் சாலையை சீரமைக்க முடியாது. தேர்தலுக்குப் பிறகு சாலையை சீரமைத்து தருகிறோம்.' என்று உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது..

Updated On: 4 March 2021 10:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?