புதுக்கோட்டை அருகே சைல்டு லைன் சார்பில் குழந்தை தொழிலாளரை தவிர்க்க விழிப்புணர்வு

சைல்டு லைன் சார்பில் திருமயம் பேருந்து நிலையம் வளாகத்தில் நடைபெற்ற குழந்தைத்தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
திருமயத்தில் 1098 சைல்டு லைன் சார்பில் குழந்தை தொழிலாளர் வேலைக்கு அமர்த்த கூடாது என்பதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது..
இதில், தன்னார்வலர்கள்,பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் குர்ஜாத்பானு, அன்பழகன், ஆரோக்கிய ராஜ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரத்தினம், பனையபட்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், ரமேஷ், காவலர் கார்த்திக்,வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரன்,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் அருண் ஆரோக்கிய மேரி,திருமயம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், 1098 சைல்டு லைன் திருமயம் களப்பணியாளர் ராஜலெட்சுமி, பொன்னமராவதி களப்பணியாளர் பூங்கொடி மற்றும் கல்லுரி மாணவ, மாணவிகள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்கு ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu