புதுக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகத்துடன் கொண்டாட்டம்

புதுக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகத்துடன் கொண்டாட்டம்
X

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கு புதுக்கோட்டை  பல்லவன்குளம் கிழக்குப்புறமுள்ள சீதாபதி கிருஷ்ணா விநாயகர்

சீதாபதி கிருஷ்ணா விநாயகர்கோவிலில் காலையில் கணபதி ஹோமம் மற்றும் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள்நடந்தது

புதுக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவை பக்தர்கள் உற்சாகமாகவும் கோலாகலமாகவும் கொண்டாடினார்கள். புதுக்கோட்டை நகரில் பல்லவன்குளம் கிழக்குப்புறமுள்ள சீதாபதி கிருஷ்ணா விநாயகர்கோவிலில் காலையில் கணபதி ஹோமம் மற்றும் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள்நடந்தது . பின்னர் வெள்ளிக்காப்பு மலர் அலங்காரத்தில் தீபராதனை நடைபெற்றது.

இதேபோன்று பல்லவன்குளம் மேற்குப்புறமுள்ள சதுர்த்தி விநாயகர்கோவில் புதுக்கோட்டை பேரூந்துநிலையம் அருகிலுள்ளவிநாயகர் ஆலயம் உள்ளிட்டகோவிகளில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்புடன் நடந்தது மேலும் தமிழகத்தின் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா திருத்தேரோட்டம் கொட்டும் மழையில் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள உலக பிரசித்திபெற்ற குடவரைக் கோவிலான பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவானது கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. உற்சவரான கற்பக விநாயகர், தினமும் பல்வேறு வெள்ளி வாகனங்களில் திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார். விழாவில் முக்கிய நாளான திருத்தேரோட்டம் நடைபெற்றது.

பெரிய தேரில் உற்சவரான கற்பக விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோன்று சிறிய தேரில் சண்டிகேஸ்வரர் அருள்பாலித்தார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு .பக்தர்களும் உற்சாகத்துடன் கோயில் விழாக்களிலும், ஆன்மீக நிகழ்வுகளிலும் பங்கேற்றனர். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுப்பின்னர் நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை பக்தர்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் பிரமாண்டமாகக் கொண்டாடி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags

Next Story