/* */

புதுக்கோட்டை அருகே உடைகல்குவாரி விரிவாக்கம்: பொதுமக்களிடம் கருத்து கேட்பு

உடைக்கல் குவாரி விரிவாக்கத்துக்கு கிராம மக்கள் ஆதரவளித்து கருத்துகளை பதிவு செய்தனர்

HIGHLIGHTS

புதுக்கோட்டை அருகே உடைகல்குவாரி விரிவாக்கம்: பொதுமக்களிடம் கருத்து கேட்பு
X

 உடைக்கல் குவாரி விரிவாக்கம் செய்தல் தொடர்பாக, மேலூர் கிராமப்பகுதி பொதுமக்களிடையே கருத்துக்கேட்புக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம், மேலூர் கிராமத்தில் சாய் ஹரிதம் இன்ப்ரா பிரைவேட் லிமிடெட் உடைக்கல் குவாரி விரிவாக்கம் செய்தல் தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், மேலூர் கிராமத்தில், சாய் ஹரிதம் இன்ப்ரா பிரைவேட் லிமிடெட் உடைக்கல் குவாரி விரிவாக்கம் செய்தல் தொடர்பாக, மேலூர் கிராமப்பகுதி பொதுமக்களிடையே கருத்துக்கேட்புக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் (04.05.2022) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உடைக்கல் குவாரி செயல்படுத்தும் முறைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழுமம், 3 வது தளம், பனகல் மாளிகை, நெ.1, ஜென்னிஸ் ரோடு, சைதாப்பேட்டை, சென்னை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

மேலும் உடைக்கல் குவாரி விரிவாக்கம் செய்தல் தொடர்பாக இக்கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள்; மேலூர் கிராமத்தில் பயன்பாடில்லாமல் உடைக்கல் குவாரிகள் இருப்பதாகவும் அதனால் விலங்குகள் அக்குவாரிகளில் விழுந்துவிடுவதாகவும் அதனை தடுப்பதற்கு உரிய தடுப்பு வேலி அமைக்க வேண்டுமெனவும், மேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட குளத்திற்கு வரக்கூடிய வரத்து வாரிகளை சரிசெய்து அக்குளத்தின் நீரை குடிநீர் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு கோரிக்கைகளை வைத்து இந்த உடைக்கல் குவாரி விரிவாக்கத்துக்கு ஆதரவளித்து கருத்துகளை பதிவு செய்தனர். பின்னர் இக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை அளித்தனர்.

பின்னர் ஆட்சியர் பேசியதாவது: பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு, பொது மக்களின் நலன் கருதி திட்டங்கள் செயல்படுத்தப்படும். மேலும் உடைக்கல் குவாரி விரிவாக்கம் செய்தல் தொடர்பாக இக்கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள்; மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு கழிவறை வசதிகள் செய்து தருமாறும், உடைக்கல் குவாரிகளுக்கு உடைப்பதற்கு பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த வெடிப்பொருட்களுக்கு பதிலாக மாற்று வெடிப்பொருட்களை பயன்படுத்துமாறும் இக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை அளித்தனர். அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு, பொதுமக்களின் நலன் கருதி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசேகரன், உதவி இயக்குநர் (கனிமம்) விஜயராகவன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர், க.ராஜராஜேஸ்வரி, வட்டாட்சியர் பெரியநாயகி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 4 May 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...