ஜூன் 8 ல் புதுக்கோட்டைக்கு முதல்வர் வருகை: ஆட்சியர் - காவல் அதிகாரிகள் ஆலோசனை

முதலமைச்சர் ஜூன் 8 -ல் புதுக்கோட்டைக்கு வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு ஆலோசனை மேற்கொண்டார்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 08.06.2022 அன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தருவதையொட்டி, விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் .கவிதா ராமு, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர்அ.சரவணசுந்தர் (05.06.2022) ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், விழாவிற்கு வருகை தரும் பயனாளிகள், இருக்கைகள், குடிநீர்வசதி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும், முக்கிய பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் இருக்கைகள், விழா மேடை மற்றும் பந்தலில் அமருபவர்களின் இருக்கை வசதிகள், மருத்துவக்குழு மற்றும் விழாவிற்கு தேவையான தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, வருவாய் கோட்டாட்சியர்; அபிநயா, செயற்பொறியாளர் (கட்டடம்) வி.சுகுமாரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கருணாகரன், உதவிப் பொறியாளர் பாஸ்கர், மாவட்ட ஆட்சியரக அலுவலக மேலாளர் கபிரியல் சார்லஸ், வட்டாட்சியர் தமிழ்மணி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu