கீரனூர் அருகில் இளம்பெண் ஒருவர் மாயம்: பெற்றோர் புகார்

கீரனூர் அருகில் இளம்பெண் ஒருவர் மாயம்:  பெற்றோர் புகார்
X

மாதிரி படம் 

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா, கீரனூர் அருகில் காயம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரெங்கராஜ் மனைவி ரேவதி. இவரது மகள் சந்தியா வயது 17. பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற சந்தியா பல மணி நேரமாகியும் வீட்டிற்கு வராததால் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் எங்கே சென்றார் என்ற என்ற தகவல் கிடைக்கவில்லை. இதனையடுத்து மாத்தூர் காவல் நிலையத்தில் சந்தியாவின் அம்மா ரேவதி கொடுத்த புகாரின் பேரில் மாத்தூர் காவல் உதவி ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.


Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?