/* */

ரயில்வே மேம்பால பணிக்கு 'சிக்னல்' கிடைக்குமா? தொடரும் வாகன ஓட்டிகளின் அவதி!

புதுக்கோட்டை களமாவூர் ரயில்வே மேம்பாலம் பணிகளை முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வராததால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள களமாவூரில், திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிக்கு, மத்திய அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மதுரைத் திட்ட அலுவலர் மேற்பார்வையில், 2006ஆம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது.

இதில், திருச்சி புதுக்கோட்டை இடையேயான 50 கிலோமீட்டர் தொலைவிற்கு, கீரனூர் - களமாவூர் பகுதியில் ரயில்வே பாதை குறுக்கிடுகிறது. இதற்கான உயர்மட்ட பாலம் முடிந்த நிலையில், இணைப்பு சாலை பணி மட்டும் நிறைவடையவில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் பணி முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டது.

இதனால், பணியை மீண்டும் தொடராமல் அப்படியே போட்டு விட்டு சென்று விட்டனர். மற்றொரு ஒப்பந்ததாரர் மூலம் பணி தொடங்க உத்தரவிடப்பட்டது. கீரனூர் - களமாவூர் சாலை, 1/2 கிலோமீட்டர் தூரம் கொண்டது. இம்மேம்பால சாலை பணிக்காக அமைக்கப்பட்டிருந்த மாற்றுச்சாலை, குண்டும் குழியுமாக உள்ளது. சாலை பணிகள் மிக மெதுவாக நடைபெற்று வருகின்றன.

கடந்த 14 ஆண்டுகளாக இந்த பணி நிறைவடையாததால், வாகன ஓட்டிகள் ஒற்றையடிப் பாதையில் செல்வது போல், வாகனத்தில் சென்று கொண்டிருக்கின்றன. இதனால், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த மேம்பால பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால், மது பிரியர்களின் இரவுநேர மதுபான கூடமாகவும் காட்சியளிக்கின்றது.

Updated On: 29 April 2021 5:01 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  3. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  4. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  5. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  6. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  8. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  9. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  10. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு