/* */

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து ஒப்பாரி போராட்டம்

கறம்பக்குடியில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை  கண்டித்து ஒப்பாரி போராட்டம்
X

கறம்பக்குடியில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனி கடை முக்கத்தில் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் பெட்ரோல், டீசல் ,கேஸ் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ரம்யா, ஒன்றிய துணைத் தலைவர் விமலாராணி முன்னிலையில் இருசக்கர வாகனம் மற்றும் கேஸ் சிலிண்டரை சுற்றி வந்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும் பெட்ரோல் ,டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்தும் முதியோர்களின் ஓய்வூதியத்தை திரும்ப வழங்க வலியுறுத்தி பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

.

Updated On: 21 July 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  2. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  4. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  5. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  7. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  8. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  9. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  10. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...