புதுக்கோட்டை அருகே கிராவல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு

புதுக்கோட்டை மாவட்டம்,கறம்பக்குடி தாலுகா, குளந்திரான்பட்டு பெரியகுளம்
புதுக்கோட்டை மாவட்டம்,கறம்பக்குடி தாலுகா, குளந்திரான்பட்டு பெரியகுளம் பகுதியில் கிராவல் மண் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம நிர்வாக அலுவலரிடம் சமூக ஆர்வலர் துரைகுணா மனு அளித்தார்.
குளந்திரான்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் துரைகுணா அளித்த மனுவில், , தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து தொடர்ந்து போராடி வருகிறேன். இந்நிலையில்புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, குளந்திரான்பட்டு 24 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பெரியகுளத்தை கிராவல் மண் குவாரி அமைப்பது தொடர்பாக ஊர் பொதுமக்கள் இது சம்பந்தமாக ஆட்சேபணை தெரிவிக்கலாம் என்று கிராம நிர்வாக அலுவலர் வெளியிட்ட அறிக்கையின்படி, கறம்பக்குடி தாலுகா கரம்பக்குடி சரகம் குளந்திரான்பட்டு கிராம புல எண்:12 அரசு புறம்போக்கு மொத்த பரப்பு 24.14.0 ஹெக்டேர் பாய்ச்சல் ஆதாரமற்ற முதலாவது வகுப்பு பெரியகுளம் என நில உடைமை மேம்பாட்டு திட்ட கணக்கில் பதிவாகியுள்ளது.
தமிழ்நில அளவை பதிவேட்டில் நத்தம் என வைக்கப்பட்டுள்ள இடத்தில் குளந்திரான்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் கருப்பையா என்பவர் கிராவல் குவாரி அமைக்க அனுமதி கோரிய மனுவின் பேரில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெரியகுளம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமானதாகும். இக்குளத்திற்கு கல்லணை கால்வாய் காவேரி நீர் வந்து பாய்ந்து வருடந்தோறும் சுமார் 150 ஹெக்டேர் விவசாய நிலங்களில் முப்போகம் விளைச்சல் பாசனம் பெறும் குளமாகும். குளத்தை கடந்த 15 ஆண்டுகளாக பராமரிப்பு செய்யாமல் மழைநீர் தேங்குவதற்கும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் வாய்ப்பில்லாமல் போனது இதனால் பெரிய குளத்தின் நீரை ஆதாரமாக கொண்டு செய்து வந்த விவசாயமும் தடைபட்டது.
மேலும். கால்நடைகளின் தாகம் தீர்ப்பதும் விவசாய பணிகளுக்கும் இந்தக்குளம் உதவ முடியாமல் போனது. பெரிய குளத்தை சுற்றி தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து குளத்தை மேலும் மாசு படுத்தி வருகிறார்கள். இதனை கவனத்தில் கொண்டு கிராவல் குவாரிக்கு அமைப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu