/* */

தர்ணாவில் ஈடுபட்டவருக்கு உதவி செய்த கந்தர்வகோட்டை மாவட்ட கவுன்சிலர் ஸ்டாலின்

தனிநபர் ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்டுத் தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட முனிராஜ்

HIGHLIGHTS

தர்ணாவில் ஈடுபட்டவருக்கு உதவி செய்த கந்தர்வகோட்டை மாவட்ட கவுன்சிலர் ஸ்டாலின்
X

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட வருக்கு உதவி செய்த.   கந்தர்வகோட்டை திமுக மாவட்ட கவுன்சிலர் ஸ்டாலின்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட வரை சமாதானம் செய்து அதிகாரிகளிடம் அழைத்துச்சென்று உதவிய கந்தர்வகோட்டை திமுக மாவட்ட கவுன்சிலர் ஸ்டாலினுகக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே கல்லுக்குழி வாழ் மக்களுக்காக கந்தர்வகோட்டை அருகே கோவிலூர் கிராமம் நத்தம் என கிராம கணக்கில் தாக்கலாகி உள்ள இடத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு அந்த இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

மேற்கண்டவாறு ஒதுக்கப்பட்ட இடத்தில் மையப்பகுதியை தனிநபர் சுப்பிரமணியன் என்பவருக்கு பட்டா வழங்கி அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து இடத்தில் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனை தடுக்க வேண்டும் ஆக்கிரமிப்பு செய்த இடத்தினை தனி நபரிடம் இருந்து மீட்டுத் தர வேண்டும் எனக்கூறி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே அந்தப் பகுதியைச் சேர்ந்த முனிராஜ் என்பவர் தனி நபருக்கு பட்டா வழங்கியுள்ளதை கண்டித்தும் அந்த இடத்தினை ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் கொளுத்தும் வெயிலில் ஈடுபட்டார் .

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வருகை தந்த கந்தர்வகோட்டை மாவட்ட திமுக கவுன்சிலர் ஸ்டாலின் தர்ணாவில் ஈடுபட்ட முனிராஜ் என்பவரிடம் பேச்சு நடத்தி அதிகாரியிடம் அழைத்துச் சென்று அவருடைய கோரிக்கை சரியானது எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முனிராஜ் தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றார். தனிநபர் ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்டுத் தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டு இருந்த முனிராஜ்யிடம் அதிகாரிகள் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடாமல் பிடிவாதமாக இருந்த முனிராஜ், மாவட்ட கவுன்சிலர் ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை கைவிட்டதால் மாவட்ட கவுன்சிலருக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Updated On: 22 April 2022 10:42 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்