/* */

பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபர் அடித்துக்கொலை: உறவினர்கள் 2 பேர் கைது

வெங்கடேசன் என்பவர், பேருந்து நிலையத்தில் குழந்தையுடன் நின்றிருந்த சுகன்யாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது

HIGHLIGHTS

பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபர் அடித்துக்கொலை:  உறவினர்கள் 2 பேர் கைது
X

புதுக்கோட்டை மாவட்டம், தெற்கு துவரவயல் கிராமத்தைச் சேர்ந்த சுகன்யா என்ற பெண் நேற்று முன்தினம் கீரனூர் பேருந்து நிலையத்தில் தனது குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார்.



அப்போது அந்த பேருந்து நிலையத்தில் சுற்றி திரியும் மதுபோதைக்கு அடிமையான சற்று மனநலம் பாதிக்கப்பட்ட வெங்கடேசன் என்பவர், பேருந்து நிலையத்தில் கைக்குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த சுகன்யாவிடம், சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுகன்யா அவரது சகோதரர் சுப்பிரமணியனிடம் தெரிவித்துள்ளார்.




இதனையடுத்து அங்கு வந்த சுப்பிரமணியன் மற்றும் அவரது நண்பர் யோகராஜ் ஆகியோர் சில்மிஷத்தில் ஈடுபட்ட வெங்கடேசனை தாக்கியுள்ளனர். இதில் கை மற்றும் கால் பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு, பேருந்து நிலையத்தில் கிடந்தவரை போலீசார் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்த கீரனூர் போலீசார், சுப்பிரமணியன் மற்றும் யோகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 2 Sep 2021 5:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!