/* */

கந்தர்வக்கோட்டை அருகே அடுத்தடுத்து தீ விபத்து : போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்

புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை அருகே அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

HIGHLIGHTS

கந்தர்வக்கோட்டை அருகே அடுத்தடுத்து தீ விபத்து :  போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்
X

கந்தர்வகோட்டை,கரும்புத்தோட்டத்தில் ஏற்பட்ட தீயை  அணைக்கும் தீ அணைப்பு வீரர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை தாலுக்காவில், நடுப்பட்டியில் உள்ள கோவிந்தராஜன் என்பவருக்கு சொந்தமான வாழை மற்றும் கரும்பு தோட்டம் உள்ளது. அவரது கரும்புத் தோட்டத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் கரும்பு தோட்டம் அனைத்தும் எரிந்து சேதமடைந்தது.

இதுகுறித்த தகவல் அறிந்த கந்தர்வக்கோட்டை தீயணைப்பு வீரர்கள்பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இச்சம்பவம் நடந்து ஒரு மணிநேரத்திற்குள் கந்தர்வகோட்டை அருகே மட்டங்கால் கிராமத்தில் கருப்பு கோவில் அருகே வைத்தியலிங்கம், என்பவருக்கு சொந்தமான சவுக்கு தோட்டத்தில் மின்கம்பி உராய்வின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் பல ஏக்கர் சவுக்கு மரங்கள் எரிந்து சாம்பலானது. தகவலறிந்து விரைந்து சென்ற கந்தர்வக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஆரோக்கியசாமி தலைமையில், தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். கந்தர்வக்கோட்டை பகுதியில் அடுத்தடுத்து இரு இடங்களில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 20 Jun 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!