/* */

அரசு பள்ளி நிலத்தை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

அரசு பள்ளி நிலத்தை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை கோரி புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

அரசு பள்ளி நிலத்தை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி  மனு
X

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே அரசு பள்ளி நிலத்தை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி  காவல் கண்காணிப்பாளரிடம் பொதுமக்கள் மனு கொடுக்க வந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளிக்கு சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் வேணுகோபால் செட்டியார் என்பவர் 10 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.

இந்த இடத்தை பள்ளி மாணவர்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில் புனிதவதி, சாந்தி, மதியழகன், தமிழழகன் மற்றும் ராதா சசிகுமார் ஆகியோர் கூட்டாக சேர்ந்து போலி ஆவணம் தயார் செய்து, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தை அபகரித்து வந்ததாக தெரிய வருகிறது.

இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பொதுமக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

Updated On: 19 April 2022 12:49 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  2. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  3. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  5. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  6. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  7. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  9. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்த நாள்: பெருந்துறையில் நடமாடும் வாகனம்...
  10. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...