/* */

பள்ளி- கல்லூரி மாணவிகள் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு:அச்சத்தில் பெற்றோர்

அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் 4 பேருக்கும் திருமயம் பகுதியிலுள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவிக்கும் கொரோனா பாதிப்பு

HIGHLIGHTS

பள்ளி- கல்லூரி மாணவிகள் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு:அச்சத்தில் பெற்றோர்
X

கந்தர்வகோட்டை அரசு பள்ளி படிக்கும் மாணவி ஒருவருக்கு இன்று கொரானா பாதிப்பு ஏற்பட்டது

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மாணவர்கள் பெற்றோர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்ப டாமல் இருந்த வந்த நிலையில், தமிழக அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கு பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9 ,10, 11 ,12-ஆம் வகுப்புகள் மற்றும் செயல்படும் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவித்தது.

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல், புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், பள்ளிகள் திறந்த இரண்டாவது நாளிலேயே புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளியில் படிக்கும் பன்னிரண்டாம் வகுப்பு மனைவிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, பள்ளியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.


மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பள்ளிகளும் கண்காணிக்கப்பட்டு வந்தது. இன்று புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 12 -ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியிலும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பள்ளி மாணவி புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் நான்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் மற்றும் திருமயம் பகுதியில் தனியார் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவி உள்பட மொத்தம் 5 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



Updated On: 9 Sep 2021 7:27 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
  8. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  9. இந்தியா
    நன்கொடை வழங்கியதில் இந்திய அளவில் இவர் தான் நம்பர் ஒன் பெண்மணியாம்
  10. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...