/* */

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நிறைவுபெற்ற திட்டங்கள்: அமைச்சர் தொடக்கம்

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நிறைவுபெற்ற திட்டங்களை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடக்கி வைத்தார்

HIGHLIGHTS

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நிறைவுபெற்ற திட்டங்கள்: அமைச்சர்  தொடக்கம்
X

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப்பகுதியில் புதிய திட்டப்பணிகளை தொடக்கி வைத்த அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். உடன் ஆட்சியர் கவிதாராமு.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நிறைவுபெற்ற திட்டங்களை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு சதலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் (03.05.2022) பங்கேற்று அறமஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் நலனுக்காக எண்ணற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்திவருகிறார் அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இதில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், ஆயிங்குடி மேற்கு மொச்சி பிள்ளையார் கோவில் அருகில் ரூ.6.36 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள பேவர் பிளாக் சாலை பணி, வல்லவாரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.11.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள சுற்றுச்சுவர் கட்டுமானப் பணி, ஆயிங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.7.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள சுற்றுச்சுவர் கட்டுமானப் பணி, ஆயிங்குடி ஆதிதிராவிடர் காலனியில் ரூ.14.16 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள மயான சாலை பணி, ஆயிங்குடி மேற்கில் ரூ.11.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள மயான சாலை பணி, மாத்தூர் இராமசாமிபுரம் மாரியம்மன் கோவில் அருகில் ரூ.8.49 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள பேவர் பிளாக் சாலை பணி ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆயிங்குடி ஆதிதிராவிடர் காலனியில் ரூ.8.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, வருவாய் கோட்டாட்சியர்; சு.சொர்ணராஜ், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 May 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  7. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  8. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு