/* */

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சர் வழங்கல்

மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 521 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சர் வழங்கல்
X

 கறம்பக்குடி வட்டம், ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட வருவாய் அலுவலர் . மா.செல்வி ள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 521 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம், பள்ளிக்கல்வித்துறை சார்பில், மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 521 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்.

அதன்படி கறம்பக்குடி வட்டம், ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட வருவாய் அலுவலர் . மா.செல்வி ள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், 165 மாணவ, மாணவிகளுக்கும், கறம்பக்குடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 125 மாணவ, மாணவிகளுக்கும், கறம்பக்குடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 231 மாணவ, மாணவிகளுக்கும் என ஆகமொத்தம் 521 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்ததாவது;

தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவியர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி கறம்பக்குடி பகுதிகளில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 521 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மிதிவண்டிகள் பள்ளி செல்லும் குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து செல்லகூடிய மாணவ, மாணவிளுக்கு பேருதவியாக இருக்கும், மேலும் இப்பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கழிவறை வசதிகள் உள்ளிட்டவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக அளவில் ரூ.36,500 கோடி நிதிஒதுக்கீடு செய்துள்ளார்கள். இதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்ப டுத்தி வருகிறார்கள். அதன்படி அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பயில்வதற்கு மிகுந்த ஆர்வம்காட்டி வருகின்றனர்.

மேலும் கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவில் பங்கேற்க 16 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

பகுத்தறிவு பகலவன் பெரியார் அவர்கள் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் பெண்கள் உயர்கல்வி பெறும் வகையில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி நன்றாக கல்வி பயின்று மாணவ, மாணவிகள் சிறந்து விளங்கி இதுபோன்ற சிறந்த மேடைகளை வருங்காலத்தில் அலங்கரிக்க வேண்டும் என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட கல்வி அலுவலர் ராஜாராம், கறம்பக்குடி ஒன்றியக் குழுத் தலைவர் மாலா ராஜேந்திரதுரை, ஆத்மா கமிட்டித் தலைவர் முத்துகிருஷ்ணன், கறம்பக்குடி பேரூராட்சித்தலைவர் முருகேசன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 23 Nov 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?