/* */

ஆலங்குடி தொகுதி: வரும் முன் காப்போம் திட்ட முகாம்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்

திருவரங்குளம் ஒன்றியம் வேப்பங்குடி அரசு நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது

HIGHLIGHTS

ஆலங்குடி தொகுதி: வரும் முன் காப்போம் திட்ட முகாம்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்
X

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வேப்பங்குடி அரசு நடுநிலைப்பள்ளியில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வேப்பங்குடி அரசு நடுநிலைப்பள்ளியில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வேப்பங்குடி அரசு நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற, கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் (30.03.2022) துவக்கி வைத்து, கர்ப்பிணி களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் பேசியதாவது: ஏழை, எளிய பொதுமக்கள் நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என்கின்ற உயரிய நோக்கத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை மீண்டும் புத்துணர்ச்சியுடன் முதல்வர் செயல்படுத்தியுள்ளார்கள்.

அதன்படி தற்போது நடத்தப்படும் முகாம்களின் மூலம் பெருநோய்கள் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அவற்றிற்கு சிகிச்சை அளித்து குணப்படுத்த இயலும். மேலும் இம்முகாம்களில் சிறப்பு மருத்துவ குழுவினர்களால் பொதுமக்களுக்கு, குழந்தை நலம், பல்மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, இருதய நோய், நீரிழிவுநோய், புற்றுநோய், காசநோய், மகப்பேறு மருத்துவம், சித்த மருத்துவம், மனநல ஆலோசனை போன்ற துறைகளில் மருத்துவ உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் முதலமைச்சர், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், நகைக்கடன் தள்ளுபடி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை பொதுமக்களின் நலனுக்காக செயல்படுத்தி வருகிறார்கள். எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த மருத்துவ முகாம்களை பயன்படுத்தி பெருநோய்கள் வருவதற்கு முன்பாகவே தடுத்திட வேண்டும் என்றார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் .இம்முகாமில் திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, வட்டார மருத்துவ அலுவலர் ராம்சுந்தர், ஊராட்சிமன்றத் தலைவர் ராஜாங்கம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 30 March 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!