/* */

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தரக்கோரி ஒன்றரை வயது மகளுடன் மனு

கணவரின் உடலை மீட்டுத்தரக்கோரி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4 வது முறையாக கண்ணீர் மல்க மனு கொடுத்த மனைவி.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பென்ன கோணம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவி கவுசல்யா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகள் உள்ளார். ராஜ்குமார் சவூதி அரேபியாவில் இரண்டரை ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ராஜ்குமார் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே வெளிநாட்டில் உயிரிழந்த தனது கணவர் உடலை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றும், இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் தனது ஒன்றரை வயது மகளுடன் கண்ணீர் மல்க மனு கொடுத்துள்ளார். மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து உடலை மீட்டு தர வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளர்.

Updated On: 12 July 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்