/* */

நீலகிரி மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

நீலகிரி மாவட்டத்தில் 250 நிலையான தடுப்பூசி முகாம்கள், 20 நடமாடும் முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
X

மாதிரி படம்

நீலகிரி மாவட்டத்தில் வருகிற 22-ந் தேதி நடைபெறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 250 நிலையான தடுப்பூசி முகாம்கள், 20 நடமாடும் முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. முகாம்கள் 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

ஒரு முகாமுக்கு 4 பணியாளர்கள் வீதம் மொத்தம் 270 முகாம்களுக்கு 1,080 பணியாளர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் சம்மந்தமான நோய் உள்ளவர்கள், நாள்பட்ட வியாதி உள்ளவர்கள் புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்கள் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை 5 லட்சத்து 38 ஆயிரத்து 27 பேர், இரண்டாம் தவணை 5 லட்சத்து 13 ஆயிரத்து 300 பேர் என மொத்தம் 10 லட்சத்து 55 ஆயிரத்து 277 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தடுப்பூசி செலுத்தி கொண்டு தங்களையும், தங்களை சார்ந்தவர்களையும் செலுத்த ஆவண செய்ய வேண்டும் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

Updated On: 20 Jan 2022 3:22 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  10. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!