/* */

ஜிகா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் - நீலகிரி கலெக்டர் சுறுசுறுப்பு

கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால், நீலகிரி எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

ஜிகா வைரஸ் பரவல்  தடுப்பு நடவடிக்கைகள் - நீலகிரி கலெக்டர் சுறுசுறுப்பு
X

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, RTPCR நெகடிவ் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே, மாவட்டத்திற்குள் வர அனுமதிக்கப்படுவர் என்று, மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.

உதகையில் இன்று செய்தியாளர்களிடையே பேசிய ஆட்சியர், நீலகிரி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் வெளி மாநிலத்திற்கு சென்று வந்தாலும், இந்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றார், கேரளா மாநிலத்தில் ஜிகா வைரஸ் பரவி வருவதை தொடர்ந்து, எல்லைப் பகுதியான கூடலூர், பந்தலூர் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக , அவர் கூறினார்.

இப்பகுதிகளில், மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறி ஆட்சித் தலைவர், கொசுக்களால் இந்த வைரஸ் பரவுவதால், இப்பகுதிகளில் தொற்று தடுப்பு நடவடிக்கையாக பிளீச்சிங் பவுடர் தெளிப்பது, மாலை நேரங்களில் புகை மூட்டுவது போன்ற பணிகள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மேற்கொள்ளுமnறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Updated On: 12 July 2021 8:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்