/* */

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

உதகையில் சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
X

பைல் படம்.

உதகை அன்பு அண்ணா காலனியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் 20, இவர் ஊட்டியில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமியுடன் பழகி வந்தார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதற்கிடையே, பன்னீர்செல்வம் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும், மேட்டுப்பாளையத்துக்கு அழைத்து சென்று சிறுமியை திருமணம் செய்துள்ளார். சிறுமியை காணவில்லை என, பெற்றோர் உதகை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்த பன்னீர்செல்வம் மற்றும் சிறுமியை மீட்டு உதகைக்கு அழைத்து வந்தனர்.

தொடர்ந்து, 18 வயது பூர்த்தி அடையாத சிறுமியை குழந்தை திருமணம் செய்ததாக பன்னீர்செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

Updated On: 16 Nov 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....