/* */

நீலகிரி மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகள் கரைப்பு

நீலகிரி மாவட்டத்தில் இன்று, 290 விநாயகர் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகள் கரைப்பு
X

 உதகை அருகே காமராஜ் சாகர் அணையில், படகில் எடுத்து செல்லப்பட்டு, விநாயகர் சிலைகளை கரைத்தனர்.

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. நடப்பாண்டில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் விசர்ஜன ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை. இதையடுத்து அரசு கட்டுப்பாடுகளின் படி பொதுமக்கள் வீடுகளில் சிறிய சிலைகளை வைத்து வழிபட்டனர்.

இதையடுத்து, இந்து முன்னணி சார்பில் வீடுகள் மற்றும் தனியார் கோவில் வளாகங்களுக்குள் 290 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நீலகிரியில் 5 இடங்களில் சிலைகளை கரைக்க போலீசார் அனுமதி வழங்கினர். அதன்படி, உதகை அருகே காமராஜ் சாகர் அணையில் சிலைகளை கரைத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் துடுப்பு படகில் சிலைகளை உள் பகுதிக்கு எடுத்துச் சென்று தண்ணீரில் கரைத்தனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் 290 விநாயகர் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது. இதேபோல், கூடலூர் பகுதியில் ஆறுகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

Updated On: 12 Sep 2021 2:37 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...