/* */

உதகையில் களிமண் விநாயகர் சிலைகள் விற்பனை ஜோர்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, உதகையில் களிமண் விநாயகர் சிலைகளின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

HIGHLIGHTS

உதகையில் களிமண்  விநாயகர் சிலைகள் விற்பனை ஜோர்
X

விநாயகர் சதுர்த்தியை, உதகையில்  விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது, விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபடுவது வழக்கம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் களையிழந்து காணப்பட்டன. இந்த வருடமும் பொது இடங்களில் சிலை வைக்க, அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. பொதுமக்கள் அவரவர் வீட்டிலேயே விநாயகர் சிலைகளை வைத்து வழிபட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் உதகை நகராட்சி மார்க்கெட்டில் விநாயகர் சிலைகள் விற்பனை களைகட்டியுள்ளது. களி மண் விநாயகர் சிலைகளை, பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். அதேபோல், பூக்கள், பழம், சுண்டல், எருக்கம் பூ உள்ளிட்டவற்றின் விற்பனையும் ஜோராக நடைபெற்றது.

Updated On: 9 Sep 2021 11:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  7. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  8. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  9. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  10. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...